sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தர்மத்தின் தலைநகரம் தர்மஸ்தலா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

/

தர்மத்தின் தலைநகரம் தர்மஸ்தலா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

தர்மத்தின் தலைநகரம் தர்மஸ்தலா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

தர்மத்தின் தலைநகரம் தர்மஸ்தலா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்


ADDED : நவ 11, 2024 05:25 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மஸ்தலா: ''டில்லி, நாட்டின் தலைநகராக இருப்பது போல், தர்மஸ்தலா தர்மத்தின் தலைநகராக அமைந்துள்ளது. திருப்பதி போன்று தர்மஸ்தலா வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்,'' என, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில், கடந்த ஒரு வாரமாக, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜய யாத்திரை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம், அங்குள்ள புகழ் பெற்ற தர்மஸ்தலாவுக்கு, அதன் தர்மாதிகாரி, ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே அழைப்பின்படி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார். அவருக்கு ஊரின் நுழைவு வாயிலில், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர் கூறியதாவது:

தர்மஸ்தலாவின் தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே, அசாதாரண சேவைகள் மற்றும் சாதனைகள் புரிந்துள்ளார். திறமையான பணி நெறிமுறை, சிறந்த தலைமை, சமூக சேவை காரணமாக, ராஜ்யசபா எம்.பி.,யானார்.

என் குருநாதரான, காஞ்சி காமகோடி பீடத்தின், 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 50 ஆண்டுகளுக்கு முன், கால்நடையாக தர்மஸ்தலாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

தற்போது இங்கு இயங்கி வரும், அன்னதானக் கூடம், 20 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் துவக்கப்பட்டது. தற்போது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த அன்னதான கூடத்தை, நவ., 14ல் திறந்து வைக்க அழைத்துள்ளனர்.

சனாதன தர்மத்தின் ஆதாரத்தில் வாழும் குடும்ப அமைப்பு, நசிந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில், தர்மஸ்தலாவில் கிராமப்புற வளர்ச்சியுடன், ஒரு தார்மீக நகரத்தையே ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே உருவாக்கி உள்ளார்.

நாம் வறுமையை ஒழிப்பதுடன், மனித நேய உணர்வின் வறுமையையும் நீக்க வேண்டும். விவசாய வளர்ச்சிக்காக, காஞ்சி மடத்தின் வாயிலாக, கார்த்திகை மாதம் திங்கள் கிழமை, துவாதசி, தியோதசி போன்ற நாட்களில் அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது.

அதேபோல், தர்மஸ்தலாவிலும் சனிக்கிழமை தோறும் அன்னாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, கலை, அறிஞர்களை பாதுகாக்க வேண்டும்.

டில்லி, நாட்டின் தலைநகராக இருப்பது போல், தர்மஸ்தலா தர்மத்தின் தலைநகராக அமைந்துள்ளது. திருப்பதி போன்று தர்மஸ்தலா வளர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்ற, தர்மஸ்தலா தர்மாதிகாரி ஸ்ரீ வீரேந்திர ஹெக்டே தம்பதி மற்றும் அவரது உறவினர்கள்.






      Dinamalar
      Follow us