காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி
காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி
ADDED : நவ 02, 2024 12:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 10 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ஆறு பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்நது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இதில், 10 மாத குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.