sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.167 ‌கோடி ஊழல்:வருமானவரி கமிஷனர் கைது- சி.பி.ஐ. அதிரடி

/

ரூ.167 ‌கோடி ஊழல்:வருமானவரி கமிஷனர் கைது- சி.பி.ஐ. அதிரடி

ரூ.167 ‌கோடி ஊழல்:வருமானவரி கமிஷனர் கைது- சி.பி.ஐ. அதிரடி

ரூ.167 ‌கோடி ஊழல்:வருமானவரி கமிஷனர் கைது- சி.பி.ஐ. அதிரடி


ADDED : செப் 27, 2011 04:22 PM

Google News

ADDED : செப் 27, 2011 04:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வேளாண் கூட்டுறவு கூட்டமைப்பிலிருந்து கடன் கொடுத்ததில் ரூ. 167 கோடி ஊழல் செய்ததாக வருவாய்த்துறை கமிஷனரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு வாணிப கூட்டமைப்பு என்ற நிறுவனம் (என்.ஏ.எப்.இ.டி). வேளாண்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் கூடுதல் நிர்வாக இயக்குனராக கடந்த 2005-ம் ஆண்டு பணியாற்றினார் ஆக்ராவைச் சேர்ந்த‌ ஹோமி ராஜ்வனாஷ். இவர் 1985-ம் ஆண்டு வருவாய்த்துறை பணிகள் பிரிவு கேடராக தேர்வானவர். இவரது தனது பதவி காலத்தின் போது உரிய அனுமதி இன்றியும், உத்தரவாதம் இன்றியும் பல்வேறு வேளாண் , விவசாயம் சார்ந்த நிறுவனங்களுக்கு முறைகேடாக கடனுதவி வழங்கியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் நடந்த விசாரணையில் ரூ.167 கோடி மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஹோமி ராஜ்வனாஷ் மற்றும் சில ஊழியர்கள் உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us