sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயிற்சி டாக்டர் கொலை வழக்கு சி.பி.ஐ., தரப்பில் மேல்முறையீடு

/

பயிற்சி டாக்டர் கொலை வழக்கு சி.பி.ஐ., தரப்பில் மேல்முறையீடு

பயிற்சி டாக்டர் கொலை வழக்கு சி.பி.ஐ., தரப்பில் மேல்முறையீடு

பயிற்சி டாக்டர் கொலை வழக்கு சி.பி.ஐ., தரப்பில் மேல்முறையீடு


ADDED : ஜன 24, 2025 11:03 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு துாக்கு தண்டனை வழங்கக் கோரி கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த கொலையில், சஞ்சய் ராய் என்பவரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். சியால்தா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது. சி.பி.ஐ., அதிகாரிகள், 120க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதன் அடிப்படையில் சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு சாகும் வரை சிறை என்ற வகையிலான ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா அதிருப்தி தெரிவித்தார். 'மாநில போலீசார் வழக்கை நடத்தியிருந்தால் துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கும்' என அவர் கூறினார்.

மேலும், சியால்தா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மேற்கு வங்க அரசு சார்பில் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், சி.பி.ஐ., தரப்பில் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நேற்றுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை, அந்த குற்றத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேபாங்சு பசக், வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us