sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு

/

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அறிவிப்பு

3


UPDATED : ஜூன் 04, 2025 06:33 PM

ADDED : ஜூன் 04, 2025 06:21 PM

Google News

UPDATED : ஜூன் 04, 2025 06:33 PM ADDED : ஜூன் 04, 2025 06:21 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாதி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் மார்ச் 1, 2027 அன்று தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளதாவது:

, இந்த பணி மார்ச் 1, 2027 முதல் நாடு தழுவிய அளவில் தொடங்கும். நாடு முழுவதும் இரண்டு கட்டமாக இந்த பணி மேற்கொள்ளப்படும். ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் உத்தரகண்டில், இந்த செயல்முறை அக்டோபர் 2026 முதல் முன்னதாகவே தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் கடைசியாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us