என்னை கைது செய்ய முழு பலத்தை பயன்படுத்தும் மத்திய அரசு: கெஜ்ரிவால் பேச்சு
என்னை கைது செய்ய முழு பலத்தை பயன்படுத்தும் மத்திய அரசு: கெஜ்ரிவால் பேச்சு
ADDED : ஜன 28, 2024 05:41 PM

சண்டிகர்: ''என்னை கைது செய்ய மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நான் சிறை செல்வதற்கு பயப்படவில்லை'' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
ஹரியானா மாநிலம் ஜிந்து மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: முந்தைய ஆட்சி காலத்தில், டில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது டில்லி மற்றும் பஞ்சாபில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. கட்டணம் பூஜ்ஜியமாகிவிட்டால் மின்சாரம் இருக்காது என எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.
நான் நன்றாகப் படித்த பொறியாளர். உண்மையான பட்டப்படிப்பு. போலி அல்ல. 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பது. டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் லைன்களை எப்படி சரி செய்வது, என்று எனக்குத் தெரியும். என்னை கைது செய்ய மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நான் சிறை செல்வதற்கு பயப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

