sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

/

வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு: மே 20க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

1


ADDED : மே 15, 2025 01:14 PM

Google News

ADDED : மே 15, 2025 01:14 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இது தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க அவகாசம் கோரி இருந்தது. இந்த வழக்கு இன்று (மே 15) மீண்டும் தலைமை நீதிபதி கவாய் அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, '' தற்போதைய சூழலில் வழக்கு விசாரணையை நீட்டிக்க வேண்டும். இடைக்கால உத்தரவு குறித்து வாதங்களை முன்வைக்க 2 மணி நேரம் வழங்கப்படும்'' என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்குகளின் விசாரணையை மே 20ம் தேதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலை மையிலான அமர்வு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us