sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வாக்காளர்களுக்கு நாற்காலி: கெஜ்ரிவால் மீது பா.ஜ., புகார்

/

வாக்காளர்களுக்கு நாற்காலி: கெஜ்ரிவால் மீது பா.ஜ., புகார்

வாக்காளர்களுக்கு நாற்காலி: கெஜ்ரிவால் மீது பா.ஜ., புகார்

வாக்காளர்களுக்கு நாற்காலி: கெஜ்ரிவால் மீது பா.ஜ., புகார்

3


ADDED : ஜன 20, 2025 04:18 PM

Google News

ADDED : ஜன 20, 2025 04:18 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது டில்லி: வாக்காளர்களுக்கு நாற்காலி கொடுத்ததாக, ஆம் ஆத்மி ஓருங்கிணைப்பாளர் மீது பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா புகார் அளித்துள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் பிப்.5 ஆம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.,வின் புது டில்லி வேட்பாளர் பர்வேஷ் வர்மா, இவர் ஆம் ஆத்மி ஓருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தொகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கத்தினருக்கு நாற்காலிகளை விநியோகிப்பதன் மூலம் கெஜ்ரிவால், நடத்தை விதிகளை மீறியதாக காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் வர்மாவின் தேர்தல் முகவர் சந்தீப் சிங் நேற்று புகார் அளித்தார்.

இது பி.என்.எஸ் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெளிவாகக் கண்டறியக்கூடிய குற்றம், மாதிரி நடத்தை விதிகளை மீறுவதாகவும் உள்ளது.

ஒரு நபர் டிராலியில் சில நாற்காலிகளை எடுத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ கிளிப்பையும் புகார்தாரர் வழங்கினார். தன்னை கெஜ்ரிவால் அனுப்பியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

புது டில்லி தொகுதி வாக்காளர்களுக்கு பணம், சேலைகள், காலணிகள் மற்றும் பிற பொருட்களை விநியோகித்ததாக வர்மா மீது ஆம் ஆத்மி கட்சியும் கெஜ்ரிவாலும் தேர்தல் அதிகாரிகளிடம் பல புகார்களை அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us