sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' 2வது ரயில் சேவை துவக்கம்

/

சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' 2வது ரயில் சேவை துவக்கம்

சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' 2வது ரயில் சேவை துவக்கம்

சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' 2வது ரயில் சேவை துவக்கம்


ADDED : மார் 12, 2024 11:59 PM

Google News

ADDED : மார் 12, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே, புதிய 'வந்தே பாரத்' ரயில் சேவையை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாடு முழுதும், 85,000 கோடி ரூபாய்க்கு மேலான, ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். தெற்கு ரயில்வேயில் சென்னை -- மைசூரு இடையே, இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

சரக்குகளை கையாள சிங்கபெருமாள் கோவில் உட்பட ஆறு இடங்களில் புதிய ஷெட்டுகள், ரயில் பாராமரிப்பு பணிக்காக பேசின்பிரிட்ஜ் யார்டில் புதிய பிட்லைன், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரயில் நிலையங்களில் மலிவு விலை மருந்தகங்களின் சேவையும் துவங்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழக கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில், நம் நாடு வேகமாக வளர்ந்து உள்ளது. அனைத்து துறைகளிலும், உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரயில்கள், அனைத்து நகரங்களையும் இணைக்கும் விதமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி அதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உள்ளது.

பிரதமர் மோடி, உள்கட்டமைப்பு வசதிகளை வலிமையாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று மட்டும் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும், 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒன்பது புதிய ரயில் சேவை கிடைத்துள்ளது. கடந்த 2009 - 2014ல், வெறும் 800 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது.

தமிழகத்துக்கு தேவையான நேரத்தில், அனைத்து ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடியும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வும் செயல்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஏப்., 5 முதல் மைசூரு வரை இயக்கம்

 சென்னை சென்ட்ரலில் இருந்து கே.எஸ்.ஆர்., பெங்களூரு வழியாக மைசூருக்கு காலை 5:50 மணிக்கு, 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணியர் தேவை அதிகமாக இருப்பதால், தற்போது இந்த தடத்தில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரயில் மாலையில் புறப்பட்டு, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சென்னை சென்ட்ரலில் இருந்து, வாரத்தில் புதன் தவிர மற்ற நாட்களில் மாலை 5:00 மணிக்கு புறப்படும் புதிய வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 9:15 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரை அடையும். பெங்களூரில் இருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் மதியம் 12:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் ஏப்., 5 முதல் மைசூரு -- சென்னை சென்ட்ரல் இடையே வழக்கமான சேவை துவங்கும். மைசூரில் இருந்து காலை 6:00 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 12:25 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11:20 மணிக்கு மைசூரை அடையும். இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.



கட்டணம் எவ்வளவு?

 சென்னை சென்ட்ரல் - எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு புதிய 'வந்தே பாரத்' ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது. இந்த ரயிலில் பயணிக்க எந்தவித சலுகையும் கிடையாது. முன்பதிவு, பயணத்தை ரத்து செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள், சதாப்தி ரயிலின்படி இருக்கும் சென்னை சென்ட்ரல் - எஸ்.எம்.வி.வி., பெங்களூரு 'ஏசி' சேர் கார் கட்டணம் - 1,150 ரூபாய், 'ஏசி' சிறப்பு வகுப்பு பெட்டி - 2,045 ரூபாய், காட்பாடிக்கு 'ஏசி' சேர்கார் கட்டணம் - 545 ரூபாய், சிறப்பு வகுப்பு பெட்டியில் 1,040 ரூபாய், கிருஷ்ணராஜபுரத்துக்கு 'ஏசி' சேர்கார் கட்டணம் - 1,130 ரூபாய், சிறப்பு வகுப்பு பெட்டியில், 2020 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us