sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

/

'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!

48


ADDED : மே 25, 2025 06:18 AM

Google News

ADDED : மே 25, 2025 06:18 AM

48


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசினார்.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மற்ற மாநில முதல்வர்கள் உட்பட அனைவருமே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசினர்.

ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டுமே தமிழில் பேசினார். இது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் முதல்வர் பேசத் துவங்கியதும், மொழி பெயர்ப்பு வசதி எங்கே என்று பலரும் தேடியதை காண முடிந்தது.

அதற்கு ஏற்ப, முன்கூட்டியே மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டிருந்த தால், முதல்வரின் பேச்சை அனைவரும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சரியாக மதியம் 2:42 மணிக்கு துவங்கிய முதல்வரின் உரை, 7 நிமிடங்க ளுக்கு நீடித்தது.

அனைவருக்குமே இந்த அளவு மட்டும்தான் நேரம் என்பதால், முதல்வர் மள மளவென வாசித்து முடித்து விட்டார். உள்ளரங்கிற்குள் தலைமை செயலர் முருகானந்தம் மட்டுமே, முதல்வருக்கு உதவியாக இருந்தார். பத்திரிகையாளர்கள் உட்பட மற்ற யாருக்கும் அனுமதி இல்லை






      Dinamalar
      Follow us