sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்கள் 'சீல்'

/

சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்கள் 'சீல்'

சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்கள் 'சீல்'

சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்கள் 'சீல்'


ADDED : ஜன 11, 2025 11:03 PM

Google News

ADDED : ஜன 11, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 830 வணிக கட்டடங்களுக்கு பெங்களூரு மாநகராட்சி 'சீல்' வைத்துள்ளது.

பெங்களூரில் சொத்துக்களுக்கான வரியை மாநகராட்சி வசூலிக்கிறது. சொத்துவரி செலுத்த நவம்பர் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் சிலர் சொத்து வரி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்தனர்.

அத்தகையோருக்கு கடந்த நவ., 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அபராத தொகை இன்றி வரி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னரும் சிலர் காலம் தாழ்த்தினர்.

எரிச்சல் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள், உரிய நேரத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் வணிக கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர்.

இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை, பெங்களூரில் எட்டு மண்டலங்களின் வருவாய் துறை அதிகாரிகள், நகரின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

சொத்து வரியை செலுத்தாமல் இருந்த 830 வணிக கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த கட்டடங்களுக்கு சொத்து வரியை செலுத்துவதற்கான அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்னரும் வரியை செலுத்தவில்லை என்றால் கட்டடங்கள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி வருவாய் துறை சிறப்பு ஆணையர் முனிஷ் மவுத்கில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us