sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி தாக்கு

/

காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் கட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி தாக்கு


UPDATED : பிப் 05, 2024 07:04 PM

ADDED : பிப் 05, 2024 06:22 PM

Google News

UPDATED : பிப் 05, 2024 07:04 PM ADDED : பிப் 05, 2024 06:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை கூட்டணி கட்சிகளே நம்பாதபோது, மக்கள் எப்படி நம்புவார்கள் என லோக்சபாவில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. தொடர்ந்து, பிப்.,1ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,5) லோக்சபாவில் ஆற்றிய உரை: புதிய பார்லி., கட்டடத்தில் ஜனாதிபதி ஆற்றிய முதல் உரையை என்றும் நினைவில் வைத்திருப்போம். 75வது குடியரசு தினம், புதிய பார்லி., கட்டடம், செங்கோல் என இவை அனைத்தும் சுவாரசியமாக இருந்தன.

10 ஆண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே ஜனாதிபதி உரை பிரதிபலிக்கிறது. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை; அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருப்பார்கள். பார்லிமென்டில் வெளியில் இருக்கவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அவர்களின் விருப்பத்தை மக்கள் தேர்தல் மூலம் நிறைவேற்றுவார்கள்.

மதத்தின் பெயரால் பிளவு


மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் பெயரால் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுப்படுத்துகின்றன; அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரசின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், பிறகட்சிகளுக்கும், நாட்டிற்கும் இழப்பு. கூட்டணி கட்சிகளின் திறமையை காங்., வீணடிக்கிறது. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்., செயல்பட தவறிவிட்டது. எதிர்க்கட்சியில் சிலர் போட்டியிடவே தயங்குகின்றனர்.

ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்னைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை. அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பதே காங்கிரசின் நோக்கம். நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்; நாட்டுக்கு சிறந்த எதிர்க்கட்சி தேவை என்பதுதான் எப்போதும் என் கருத்து. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டன.

எது குடும்ப அரசியல்?


ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருலாம் ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். காங்.,கில் ஒரு சிலரின் முக்கியத்துவம் குறைய கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. காங்., கட்சியின் முடிவுகாலம் வந்துவிட்டது. இனி வரும் காலங்களில் காங்கிரஸ் பார்வையாளர் மாடத்தில் மட்டுமே அமரும் நிலை ஏற்படும். காங்கிரசின் மந்தமான செயல்பாடுகளுக்கு உலகத்தில் வேறு யாரும் போட்டியில்லை.

நாங்கள் பேசுவது எங்களின் சாதனைகள் அல்ல; நாட்டின் சாதனைகள். உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தை பிடித்ததாக 2014ல் தற்போதைய எதிர்க்கட்சி கொண்டாடியது. ஆனால் தற்போது பொருளாதாரத்தில் 5வது இட்ததிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். 3வது முறையாக எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும் என்பது எனது வாக்குறுதி.

100 ஆண்டுகள்


உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுகிறது என்பதை ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் புரிந்துகொண்டனர். 4.8 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளோம். 17 கோடி மக்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். மத்திய பா.ஜ., அரசு பெரிய குறிக்கோள்களுடன் கடினமாக உழைக்கிறது. காங்., ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற 100 ஆண்டுகள் பிடித்திருக்கும்.

நம்பிக்கையில்லை


லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி வியூகம் சிதறிவிட்டது. இண்டியா கூட்டணி உடைந்து விட்டது என கருதியதால் தான் மம்தா தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். காங்., ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கே காங்., மீது நம்பிக்கை இல்லாதபோது மக்கள் எப்படி நம்புவார்கள்? கடவுள் ராமர் தமது வீட்டில் மீண்டும் வீற்றுள்ளதை தேசமே கொண்டாடுகிறது. காஷ்மீர் முதல் குமரி வரை பா.ஜ,, என்ன சாதித்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

வளர்ச்சி


மகளிர் சக்தியை உணர்ந்து பா.ஜ., திட்டங்களை வகுத்தது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றிபெறும்; அதில் பா.ஜ., மட்டும் 370 தொகுதிகளை வெல்லும். பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்து ஆயிரம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும். ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், சாதனங்களை தந்தால் ஏழ்மையை தோற்கடிப்பார்கள். நாட்டின் எல்லைப்பகுதி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றுள்ளன. ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி; பா.ஜ., அரசு வளர்ச்சி ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டுள்ளது.

ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது. தேசிய ஆலோசனைக்குழுவில் காங்., ஆட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவினர் இருந்தனர்? அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சியில் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உயர்ந்துள்ளனர். பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.

ரூ. 1லட்சம் கோடி




பா.ஜ., ஆட்சி காலத்தில் ரூ. 1லட்சம் கோடியை அமலாக்கத்துறை கைபற்றியது. ஆனால் இதற்கு முன் காங்., ஆட்சி ரூ.5000 கோடி தான் அமலாக்கத்துறை கைப்பறியது.இவ்வாறு அவர் உரையாற்றினார். வறுமையை ஒழிக்க பா.ஜ, அரசு எடுத்து முயற்சியின் பயனாக 25 கோடி பேர் வறுமை கோட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மோடி உரையை அடுத்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் குரல் ஒட்டெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியது.






      Dinamalar
      Follow us