sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., அழைப்பு விடுத்தது: -ஜி.டி தேவகவுடா 'பளிச்'

/

காங்., அழைப்பு விடுத்தது: -ஜி.டி தேவகவுடா 'பளிச்'

காங்., அழைப்பு விடுத்தது: -ஜி.டி தேவகவுடா 'பளிச்'

காங்., அழைப்பு விடுத்தது: -ஜி.டி தேவகவுடா 'பளிச்'


ADDED : நவ 24, 2024 11:04 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ''கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது,'' என்று, சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா உண்மையை உடைத்துள்ளார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், என்னை காங்கிரசுக்கு வரும்படி அக்கட்சியின் சிலர் அழைப்பு விடுத்தனர். பின், சித்தராமையா உட்பட யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் நிகில் குமாரசாமி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமானது.

மூன்று முறை தேர்தலில் தோற்றவர்கள் கூட மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரான உதாரணமும் உண்டு. மூன்று முறை அடைந்த தோல்வியை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, கட்சியை கட்டமைக்க நிகில் முயற்சிக்க வேண்டும்.

இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு, எங்கள் கட்சியினர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என் மகன் ஹரிஷ் கவுடாவை பிரசாரத்தில் பயன்படுத்தினர். எனது மகன் தான் தேவை என்று, தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us