sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

/

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

9


UPDATED : ஏப் 25, 2024 04:05 PM

ADDED : ஏப் 25, 2024 04:03 PM

Google News

UPDATED : ஏப் 25, 2024 04:05 PM ADDED : ஏப் 25, 2024 04:03 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.



கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக உள்ளேன். தன்னை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அம்சங்களை பிரதமரின் ஆலோசகர்கள் அவருக்கு கூறியுள்ளனர்.

பொய்யான அறிக்கை

பிரதமர் என்ற முறையில் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்பதற்காகவே நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புகிறேன். மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளுக்கு உங்கள் அரசு பொறுப்பு கிடையாதா?. உங்கள் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, ​​அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்தது என்ன?. இவ்வாறு கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கெஜ்ரிவால்

திஹார் சிறையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என டில்லி எம்.பி., சஞ்சய் சிங் பிரதமர் மோடி மற்றும் டில்லி கவர்னர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: டில்லி மக்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். அவரை தங்கள் சகோதரனாகவும், மகனாகவும் கருதுகிறார்கள். டில்லி மக்களுக்கு வலியை ஏற்படுத்தாதீர்கள்.

உங்களால் சிறப்பு கவனம் செலுத்த முடியாவிட்டால் அவரை சாதாரண மனிதனாக வாழ விடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் செய்த குற்றம் என்ன?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us