sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரண்டு தொகுதிகளில் போட்டியா? அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு

/

இரண்டு தொகுதிகளில் போட்டியா? அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு

இரண்டு தொகுதிகளில் போட்டியா? அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு

இரண்டு தொகுதிகளில் போட்டியா? அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு


ADDED : ஜன 09, 2025 10:13 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக வெளியான தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

கடந்த 2013 முதல் புதுடில்லியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இந்த முறை இரண்டு முன்னாள் முதல்வர்களின் மகன்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை வேட்பாளராக பா.ஜ., நிறுத்தியது. மூன்று முறை டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகனான சந்தீபை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

இதனால் புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் இரண்டு தொகுதிகளில் கெஜ்ரிவால் போட்டியிடப்போவதாக பா.ஜ., தலைவர்கள் கூறி வந்தனர். இதை நிராகரித்த கெஜ்ரிவால், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் கூறுகையில், “டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் 'இண்டியா' கூட்டணி விவகாரம் அல்ல. புதுடில்லி தொகுதியில் இருந்து மட்டுமே தான் தேர்தலில் போட்டியிடுவேன்,” என்றார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us