sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சர்ச்சை கேரள ஏ.டி.ஜி.பி., : டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்

/

சர்ச்சை கேரள ஏ.டி.ஜி.பி., : டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்

சர்ச்சை கேரள ஏ.டி.ஜி.பி., : டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்

சர்ச்சை கேரள ஏ.டி.ஜி.பி., : டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்

2


ADDED : டிச 18, 2024 09:09 PM

Google News

ADDED : டிச 18, 2024 09:09 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையின் சர்ச்சை ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருப்பவர் அஜித்குமார். இவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவராகவும், விசுவாசமானவராகவும் அறியப்படுகிறார்.

இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலேவை கடந்த 2023ம் ஆண்டு சந்தித்து பேசியதாக, காங்.,கை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் கடந்த செப்டம்பர் மாதம் குற்றஞ்சாட்டினார்.

திருச்சூர் தொகுதியில் பா.ஜ.,வின் சுரேஷ் கோபியை வெற்றி பெற செய்வதற்காகவும், மத்திய விசாரணை அமைப்புகளின் பிடியில் இருந்து முதல்வர் பினராயி விஜயனை காப்பாற்றவும் ஹோசபெலேவிடம் அவர் கோரிக்கை வைத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரள காவலதுறை டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான நியமன உத்தரவை கேரள தலைமை செயலர், உள்துறை செயலர், விஜிலன்ஸ் இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக உயர்மட்டக்குழு ஒப்புதலின் பேரில் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us