�� தக்காளி குருமா செய்யும் போது, வெங்காயத்தை பச்சையாக அரைத்து சேர்த்தால் குருமா வாசனை துாக்கலாக இருக்கும்.
�� கொழுக்கட்டைக்கு நீர் கொதிக்கும் போது அதனுடன் இரண்டு தேக்கரண்டி காய்ச்சிய பாலை சேர்ந்தால் கொழுக்கட்டை நிறம் நன்கு வெள்ளையாக இருக்கும்.
�� மோர்களி செய்த பின், அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு கிளறினால் சுவையாக நன்றாக இருக்கும்.
�� மைதா மாவில் போளி செய்வதை விட, கோதுமை மாவில் செய்தால் உடலுக்கு நல்லது.
�� டீ போடும் போது அதனுடன் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்தால் டீ சுவையாக, மணமாக இருக்கும்.
�� அரிசி மாவை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்த பின் முறுக்கு, தட்டை செய்தால் மொறு, மொறுப்பாக இருக்கும்.
�� சூடான பாலில் எலுமிச்சை சாறு கலந்து பன்னீர் செய்வதை விட, ஆறிய பாலில் தயிரை கலந்து தயாரித்தால் பன்னீர் மிருதுவாக கிடைக்கும்.
�� பாகற்காயை பிரை செய்வதற்கு முன்பு அரைமணி நேரம் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்தால் கசப்பு தன்மை குறையும்

