sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

/

காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு


ADDED : அக் 16, 2025 10:36 AM

Google News

ADDED : அக் 16, 2025 10:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காப்புரிமை தொடர்பாக, 'சோனி' நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பாடல்கள் காப்புரிமை தொடர்பாக, பதிவு செய்த ஒப்பந்தங்களை மீறி செயல்பட்டதால் இசையமைப்பாளர் இளையராஜாவின், 'இளையராஜா மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி, 'சோனி' நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, வேறு ஒரு விவகாரத்தில், 'சோனி' நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, 'சோனி' நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சோனி' நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருப்பது வேறு திரைப்படங்கள் தொடர்புடைய புதிய வழக்கு. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்கை, மூல வழக்கு நடக்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

'இந்த கோரிக்கையை நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முன் வைக்கலாமே' என, தலைமை நீதிபதி கேட்டபோது, ''அப்படியானால் எங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என, சிங்வி கோரிக்கை விடுத்தார்.

'எதிர்மனுதாரரை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, திட்டவட்டமாக கூறிய தலைமை நீதிபதி, 'இது தொடர்பாக இளையராஜா தரப்பு மூன்று வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்தார்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us