sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்

/

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்

1


ADDED : அக் 16, 2025 10:41 AM

Google News

1

ADDED : அக் 16, 2025 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய ராணுவத்திற்கு ரூ.659 கோடியில் அதிநவீன உபகரணங்கள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எம்கேயு லிமிடெட் மற்றும் மெட்பிட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஒருங்கிணைந்த நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.659.47 மதிப்பில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ராணுவத்திற்கு, இலக்குகளை இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் கருவி உள்பட அதிநவீன கருவிகள் வாங்கப்படுகிறது.

இந்தக் கருவிகள் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் எஸ்ஐஜி 716 துப்பாக்கிகளின் முழு தூரத்தையும் பயன்படுத்த உதவும். குறிப்பாக, நட்சத்திர ஒளியில் கூட, 500 மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க உதவுகிறது. தற்போது, பயன்பாட்டில் உள்ள கருவிகளை விட இது மேம்படுத்தப்பட்ட அதிநவீன கருவிகளாகும்.

இந்த முயற்சி உள்நாட்டு பாதுகாப்புத் துறை திறன்களை மேம்படுத்துவதோடு, உற்பத்தி மற்றும் மூலப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us