sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?

/

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவித் திட்டம்: தமிழகத்தில் எத்தனை பயனாளிகள்?


UPDATED : பிப் 07, 2025 04:23 PM

ADDED : பிப் 07, 2025 04:11 PM

Google News

UPDATED : பிப் 07, 2025 04:23 PM ADDED : பிப் 07, 2025 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில், தமிழகத்தில் 3.99 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஒதுக்கிய நிதியின் விவரங்கள், பயனாளிகள் விவரங்கள், தமிழகத்தில் மாவட்ட வாரியாக எவ்வளவு என்பவை குறித்து தி.மு.க., எம்.பி., கனிமொழி லோக்சபாவில் கேள்வி எழுப்பி இருந்தார்

இதற்கு மத்திய இணை அமைச்சர் தோகன் சாகு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எந்த நிதியும் வெளியிடப்படுவதில்லை. கடன் தொகை வங்கிகளால் நேரடியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஜன., 30, 2025 நிலவரப்படி, பிரதமரின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 68.02 லட்சம். இவர்களில் தமிழகத்தில் 3.99 லட்சம் பயனாளிகள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,00,429 பேர் கடன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 8966 பேர் பயன் பெற்றுள்ளனர்.

ஜன., 30 நிலவரப்படி, தமிழகத்தில், சுமார் 2.28 லட்சம் பயனாளிகள் முதல் தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1.37 லட்சம் பயனாளிகள் 2வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். மேலும், 45,363 பயனாளிகள் 2வது தவணை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். இவர்களில் 26,955 பயனாளிகள் 3வது தவணை கடனைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us