ADDED : மார் 08, 2024 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்தவர் மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது அந்த வழக்கை ரத்து செய்த நீதிபதிகள் கூறியதாவது:
அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள பேச்சு சுதந்திரம் குறித்து போலீஸ் துறைக்கு பாடம் எடுக்க வேண்டிய தேவை உள்ளது.
நம் அரசியல் அமைப்பு நமக்கு வழங்கியுள்ள ஜனநாயக மதிப்பீடுகளை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். விமர்சனம் செய்வது குற்றம் ஆகாது, அப்படியெனில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

