sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிமீறலா: விசாரணைக்கு சிவிசி உத்தரவு

/

டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிமீறலா: விசாரணைக்கு சிவிசி உத்தரவு

டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிமீறலா: விசாரணைக்கு சிவிசி உத்தரவு

டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிமீறலா: விசாரணைக்கு சிவிசி உத்தரவு

1


UPDATED : பிப் 15, 2025 01:36 PM

ADDED : பிப் 15, 2025 01:08 PM

Google News

UPDATED : பிப் 15, 2025 01:36 PM ADDED : பிப் 15, 2025 01:08 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) உத்தரவிட்டு உள்ளது.

கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவி வகித்த போது, சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். இந்த பங்களாவில் ரூ.45 கோடி செலவு செய்து புனரமைப்பு பணிகளை அவர் மேற்கொண்டதாக துவக்கத்தில் இருந்தே பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி வந்தனர். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது.இந்த பங்களாவில் பா.ஜ., சார்பில் முதல்வராக பதவியற்பவர் வசிக்க மாட்டார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.

இந்த பங்களா கட்டியதில் முறைகேடு நடந்ததாக, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் டில்லி பா.ஜ., தலைவர் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த பங்களா தொடர்பாக ஆய்வு நடத்திய மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு செய்த அறிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்கு சிவிசி உத்தரவிட்டு உள்ளது. இந்த பங்களா கட்டியதில் விதிமுறைகள் உள்ளதா என்பதை விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us