sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திராவில் 'மோந்தா' புயலால் ரூ.6,384 கோடி இழப்பு

/

ஆந்திராவில் 'மோந்தா' புயலால் ரூ.6,384 கோடி இழப்பு

ஆந்திராவில் 'மோந்தா' புயலால் ரூ.6,384 கோடி இழப்பு

ஆந்திராவில் 'மோந்தா' புயலால் ரூ.6,384 கோடி இழப்பு


UPDATED : நவ 11, 2025 06:09 AM

ADDED : நவ 11, 2025 02:54 AM

Google News

UPDATED : நவ 11, 2025 06:09 AM ADDED : நவ 11, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: வங்கக்கடலில் உருவான மோந்தா புயலால், ஆந்திராவில் ஒட்டுமொத்தமாக, 6,384 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மாநில அரசு, முதற்கட்டமாக, 900 கோடி ரூபாயை ஒதுக்கும்படி மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், கடந்த அக்டோபர் 29ம் தேதி ஆந்திராவின் மசிலிப்பட்டணம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது.

அப்போது, அம்மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் வீசிய சூறைக்காற்றால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதுதவிர அங்குள்ள விளைநிலங்களும் நீரில் மூழ்கின.

இந்த புயலால் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன்படி, முதற்கட்ட மதிப்பீடுகளின்படி மொத்தம், 5,265 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்ட ஆந்திர அரசு தற்போது மறுமதிப்பீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய குழு, ஆந்திராவில் நேற்று மீண்டும் ஆய்வு நடத்தியது.

அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு சார்பில் மறுமதிப்பீடு செய்தபோது, மொத்தம், 6,384 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

இதில் ஆந்திராவின் 24 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள், உட்கட்டமைப்புகள் கடும் பாதிப்புக்குள்ளானதாக குறிப்பிட்டுள்ளது.

எனவே, முதற்கட்டமாக, 900 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குழுவிடம் ஆந்திர அரசு வலியுறுத்தியது.






      Dinamalar
      Follow us