sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அணை திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

/

அணை திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணை திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணை திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஜூன் 16, 2025 09:05 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 09:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரளாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, மங்கலம் ஆற்றின் துணை ஆறான செருகுன்னபுழா ஆற்றின் குறுக்கே, ஆலத்துார் தாலுகாவில் கட்டப்பட்டு உள்ள மங்கலம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 77.88 மீட்டர் உயரம் உள்ள மங்கலம் அணையில், 76.52 மீட்டருக்கு நீர்மட்டம் உயர்ந்தது.

இதையடுத்து அணை பாதுகாப்பை கருதி, கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரையின்படி, அணையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை, 11:00 மணிக்கு மங்கலம் அணையின், 6 மதகுகள் வழியாக, 5 செ.மீ., உயரத்துக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.

இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன் எச்சரிக்கையாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us