sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து லோக்சபாவில் இன்று விவாதம்

/

'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து லோக்சபாவில் இன்று விவாதம்

'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து லோக்சபாவில் இன்று விவாதம்

'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து லோக்சபாவில் இன்று விவாதம்


ADDED : ஜூலை 28, 2025 04:45 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பார்லிமென்டில் பஹல்காம் தாக்குதல் மற்றும் 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான சிறப்பு விவாதம் இன்று நடைபெற உள்ளது.

பரபரப்பான சூழலுக்கு இடையே பார்லிமென்ட் இன்று கூட உள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையை முன்னிறுத்தி, இவ்விவகாரத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ல் துவங்கியது.

ஆப்பரேஷன் சிந்துார், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம், பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்த பிரச்னைகள் பற்றி விவாதிக்க உரிய நேரம் ஒதுக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தும், எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், கடந்த ஒரு வாரமாகவே பார்லி., நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில், எதிர்க்கட்சியினரின் முக்கிய கோரிக்கையான ஆப்பரேஷன் சிந்துார் பற்றி லோக்சபாவில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 16 மணி நேரம் நடக்கும் இந்த விவாதத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பதில் அளிக்க உள்ளனர்.

பிரதமர் மோடியும், இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், பெரும் பரபரப்புக்கு இடையே பார்லிமென்ட் இன்று கூட உள்ள நிலையில், லோக்சபாவில் காரசார விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல், ஆப்பரேஷன் சிந்துார் விவகாரம், ராஜ்யசபாவில் நாளை சிறப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us