தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கடன் தொல்லை தம்பதி தற்கொலை

கடன் தொல்லை தம்பதி தற்கொலை

கடன் தொல்லை தம்பதி தற்கொலை


ADDED : அக் 11, 2024 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம்நகர்: குடும்ப பிரச்னையால், மனம் நொந்து மாட்டு கொட்டகையில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

ராம்நகர், சென்னப்பட்டணாவின் கர்லஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ராஜு, 34. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, 30 என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

தம்பதி பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனம் நொந்த தம்பதி, நேற்று காலையில், தங்கள் வீட்டு மாட்டு கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அக்கூர் போலீசார், தம்பதி உடல்களை மீட்டு விசாரணையை துவக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us