sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்

/

ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்

ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்

ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு டில்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ; 285 பேர் சிக்கினர்


ADDED : டிச 27, 2025 01:50 PM

Google News

ADDED : டிச 27, 2025 01:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, டில்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 285 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

டில்லி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஆப்பரேஷன் ஆகாட் 3.0 என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் எதிரொலியாக, ஆயுதச்சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சூதாட்டச்சட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து 21 நாட்டு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், போதை ப்பொருட்கள், சட்டவிரோத மதுபான பொருட்கள், திருடப்பட்ட 310 மொபைல் போன்கள், 231 பைக்குகள், ஒரு நான்கு சக்கரம் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக போதைப்பொருட்களை சந்தையில் புழக்கத்தில் விட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இது தவிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கு, பட்டியலில் உள்ள குற்றவாளிகள் 116 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 504 பேர் கைது செய்யப்பட்டனர் என டில்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us