sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜல்லிக்கட்டு காளை பொம்மை பரிசு; மோடியின் மனம் கவர்ந்த நயினார்: டில்லி உஷ்ஷ்...!

/

ஜல்லிக்கட்டு காளை பொம்மை பரிசு; மோடியின் மனம் கவர்ந்த நயினார்: டில்லி உஷ்ஷ்...!

ஜல்லிக்கட்டு காளை பொம்மை பரிசு; மோடியின் மனம் கவர்ந்த நயினார்: டில்லி உஷ்ஷ்...!

ஜல்லிக்கட்டு காளை பொம்மை பரிசு; மோடியின் மனம் கவர்ந்த நயினார்: டில்லி உஷ்ஷ்...!

3


UPDATED : மே 04, 2025 08:20 AM

ADDED : மே 04, 2025 04:25 AM

Google News

UPDATED : மே 04, 2025 08:20 AM ADDED : மே 04, 2025 04:25 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தமிழக பா.ஜ., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், சமீபத்தில் டில்லி வந்து பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு காளை மாடல் ஒன்றை பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.

இதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மோடி, 'இதை பிரதமர் அருங்காட்சியகத்தில் வைப்பேன்' என்றாராம். பின், தமிழக அரசியல் நிலை குறித்து அவரிடம் விவாதித்தாராம். 'தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தது நாம்தான் என, தமிழகம் முழுதும் பிரசாரம் செய்யுங்கள்.

அத்துடன், காங்கிரஸ் எப்படி ஜல்லிக்கட்டை எதிர்த்தது, 'ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு' என, அப்போதைய காங்., அமைச்சர் ஒருவர் கூறியதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்' என, நாகேந்திரனிடம் கூறினாராம் மோடி.

ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர பன்னீர்செல்வமும், பழனிசாமியும் எப்படி உதவினர் என்பதையும் நினைவு கூர்ந்தாராம் மோடி. காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டை எதிர்த்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us