sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டெங்குவுக்கு சிறுவன் பலி டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

/

டெங்குவுக்கு சிறுவன் பலி டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

டெங்குவுக்கு சிறுவன் பலி டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு

டெங்குவுக்கு சிறுவன் பலி டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு


ADDED : பிப் 08, 2025 06:33 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானார். இவருக்கு டெங்கு இருப்பதை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை என, பெற்றோர் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினர்.

துமகூரு, பாவகடாவின், பாமைய்யன குடி வீதியில் வசிப்பவர் ஹரிஷ் குமார். இவரது மகன் கருணாகரன், 7, சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இவரை பெற்றோர், பாவகடாவின் தனியார் கிளீனிக்கில் சேர்த்தனர்.

பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு இருப்பது உறுதியானது. இதை டாக்டர்கள், பெற்றோரிடம் கூறாமல் சிகிச்சையை தொடர்ந்தனர்.

எட்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று உயிரிழந்தார். அதன் பின்னரே மகனுக்கு டெங்கு இருந்தது, பெற்றோருக்கு தெரிந்தது.

டாக்டர்களின் அலட்சியமே மகனின் இறப்புக்கு காரணம் என, கோபமடைந்து கிளீனிக் எதிரே போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us