மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு 'வித்யாவரிதினி' தரவு தளம் உருவாக்கம்
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு 'வித்யாவரிதினி' தரவு தளம் உருவாக்கம்
ADDED : பிப் 17, 2024 04:58 AM

இ - கவர்னன்ஸ்
l மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள், 'குடும்பா' மென்பொருள் மூலம், மூன்று மாதங்களில், 5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டு 36,000 கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
l உயர்கல்வி படிக்கும் மாணவர்கள், கல்வி உதவி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்த 'வித்யாவரிதினி' தரவு தளம் உருவாக்கப்படும்
* நிர்வாக அமைப்பை வலுப்படுத்த, 'ஏ.ஐ.,' என்ற செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் அமைக்கப்படும்
l அரசின் அனைத்து துறை தரவு தளத்தில், சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, வரும் நாட்களில் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும்
l 'சகாலா' திட்டத்தின் கீழ் இருந்த 922 குடிமக்கள் சேவைகளில், 493 சேவைகள் 'சேவா சிந்து' இணையதளத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் படிப்படியாக மற்ற சேவைகளும் சேவா சிந்து இணையதளத்தில் சேர்க்கப்படும்
l கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'இ - அலுவலக' விண்ணப்பங்கள் முறை கொண்டு வரப்படும்
l கன்னடர்கள் மற்றும் கன்னடர்கள் அல்லாதோர் நலனுக்காக கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதில் உள்ள தடைகளை நீக்க 'கன்னட கஸ்துாரி' மொழிபெயர்ப்பு மென்பொருள் சீரமைக்கப்படும்.