sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராமருக்காக காத்திருந்த சபரி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

/

ராமருக்காக காத்திருந்த சபரி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

ராமருக்காக காத்திருந்த சபரி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

ராமருக்காக காத்திருந்த சபரி கோவிலில் பக்தர்கள் வழிபாடு


ADDED : ஜன 22, 2024 06:14 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ராமர் வருகைக்காக பல ஆண்டுகள் காத்திருத்து, மோட்சம் அடைந்த சபரியின் கோவிலில், ராம பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகா சுரேபானா கிராமத்தில் உள்ளது சபரி கொல்லா வனப்பகுதி. இந்த வனப்பகுதியில், சபரி கோவில் அமைந்து உள்ளது. சபரி என்பவர் ராமர் வருகைக்காக காத்திருந்தது, அவர் முன்பே மோட்சம் அடைந்தவர் என்று, ராமாயண கதைகள் கூறுகின்றன. யார் இந்த சபரி. அவர் ஏன் ராமருக்காக காத்திருந்தார் என்பது பற்றிய விபரம்:

வேடர் குலம்


சபரி என்ற பெண், வேடர் குலத்தில் பிறந்தவர். மற்ற வேடர் குல குழந்தைகள் போன்று இல்லாமல், இவர் சற்று வித்தியாசமாக வளர்ந்தார். சிறுமியாக இருந்த போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

இளம்பெண் ஆனதும் தன்னை வேடன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பர். குழந்தைகளை பெற்று கொண்டு நம் வாழ்க்கை போய்விடும். நமது பிறப்பிற்கான பலனை அடைய வேண்டும் என்று நினைத்தார். வீட்டில் இருந்து வெளியேறி, பல கிலோ மீட்டர் துாரம் நடந்து சென்றார்.

மாதங்க முனிவர் ஆசிரமத்தின் அருகில் சென்ற போது, முனிவரையும், அவரது சீடர்களை சந்தித்தார். கரடுமுடான பாதையில் நடந்து சென்று, ஒரு குளத்தில் நீராடினர். இதனால் அந்த பாதையை, சபரி சுத்தம் செய்தார். இதுபற்றி அறிந்த முனிவர், சபரியை தனது ஆசிரமத்தில் தங்க வைத்தார்.

ஆசிரமத்தில் வசிப்பு


இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னொரு முனிவர் ஒருவர், சபரியை பற்றி தவறாக பேசிவிட்டு, குளத்தில் நீராட சென்றார். அப்போது சுத்தமாக இருந்த குளத்தின் தண்ணீர், சாக்கடையாக மாறியது. மாதங்க முனிவர் கூறியதால், அந்த குளத்தில் சபரி இறங்கினார். இதையடுத்து அந்த தண்ணீர் சுத்தமாக மாறியது. அதன்பின்னர் சபரியின் மகிமை அனைவருக்கும் தெரிந்தது.

இந்நிலையில், மாதங்க முனிவர் தனது வாழ்வின் கடைசி நேரத்தில், சபரியை அழைத்து, 'நீ இந்த ஆசிரமத்திலேயே தங்க வேண்டும். ஒரு நாள் ராமர், லட்சுமணர் கண்டிப்பாக இங்கு வருவர். அவர்களுக்கு சேவை செய்து, உனது வாழ்வின் பலனை அடைந்து கொள்' என்று கூறினார். மாதங்க முனிவர் இறந்த பின்னரும், சபரி ஆசிரமத்தில் வசித்தார்.

உணவு, துாக்கம் துறப்பு


ராமர் வருகைக்காக பல ஆண்டுகள் காத்து இருந்தார். துாங்கும் நேரத்திலோ, உணவு சாப்பிடும் நேரத்திலோ ராமர் வந்து விட்டால், அவருக்கு சேவை செய்ய முடியாது என்று நினைத்து, துாக்கம், உணவை துறந்தார். அவர் மூதாட்டி ஆன நிலையில், வனவாசம் மேற்கொண்ட ராமர், லட்சுமணர் மாதங்க முனிவர் ஆசிரமத்திற்கு வந்தனர்.

அவர்கள் இருவருக்கும் சபரி சேவை செய்தார். 'எனது பிறவிக்கான பலனை அடைத்து விட்டேன். உங்கள் முன்பே நான் மோட்சம் அடைகிறேன்' என்று ராமரிடம், சபரி கூறினார். ராமரும் இதற்கு அனுமதி அளிக்கவே, தீயில் இறங்கி உயிரை மாய்த்து கொண்டு மோட்சம் அடைந்தார். அந்த இடமே தற்போது சபரி கொல்லாவாக மாறி உள்ளது. சபரிக்கு கோவிலும் கட்டப்பட்டு உள்ளது.

ராமருக்காக காத்திருந்தவர் என்பதால், சபரி கோவில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us