sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 5 மாதங்களாகியும் தன்கருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை

/

 5 மாதங்களாகியும் தன்கருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை

 5 மாதங்களாகியும் தன்கருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை

 5 மாதங்களாகியும் தன்கருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை

3


ADDED : டிச 31, 2025 04:54 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:54 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பதவியில் இருந்து விலகி ஐந்து மாதங்களாகியும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு இன்னும் மத்திய அரசு சார்பில் வீடு ஒதுக்கப்படவில்லை.

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல் நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலையில் அப்பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை 21ல், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளே, அவர் பதவி விலகியது சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுடனான கருத்து வேறுபாடால் அவர் பதவி விலகியதாக கூறப்பட்டது.

செப்டம்பரில், துணை ஜனாதிபதிக்கான அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்த ஜக்தீப் தன்கர், டில்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் குடிபெயர்ந்தார்.

முன்னாள் துணை ஜனாதிபதி என்ற முறையில் அரசு பங்களா வழங்கக் கோரி, ஆக., 22ல், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துக்கு அவர் கடிதம் எழுதினார்.

எனினும் இதுவரை வீடு ஒதுக்கப்படவில்லை. முன்னாள் துணை ஜனாதிபதி என்ற முறையில், மாதம் 2 லட்சம் ரூபாய் ஓய்வூதியம், அரசு பங்களா, தனி செயலர் உள்ளிட்ட சலுகைகள் ஜக்தீப் தன்கருக்கு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us