காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள்: பிரதமர் மோடி சொல்கிறார்!
காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள்: பிரதமர் மோடி சொல்கிறார்!
ADDED : ஏப் 29, 2024 02:30 PM

பெங்களூரு: காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்துவிடாதீர்கள் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உங்களின் ஓட்டு மோடியை வலுப்படுத்தும்; நாட்டை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக உயர்த்தும். இந்தியாவை உற்பத்தி மையமாகவும், ஆற்றல் மையமாகவும் மாற்றுவதே எங்களின் குறிக்கோள். காங்கிரசிடம் நாட்டை ஒப்படைத்துவிடாதீர்கள்.
மின்சாரம்
ஹுப்பள்ளியில் எங்கள் மகள் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டபோது, மாநில அரசு ஓட்டு வங்கியை காப்பற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 18,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை. கோடிக்கணக்கானோர் இருளில் வாழ்ந்தனர். குழந்தைகள் படிக்க மாட்டார்கள். ஆனால் பா.ஜ., ஆட்சியில் மின்சாரம் இல்லாத கிராமம் நாட்டிலேயே இல்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது.
போலி வீடியோக்கள்
கர்நாடகாவில் எஸ்.சி, எஸ்.டி., சமூகத்தின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. பெரும்பாலான எஸ்சி, எஸ்டி, ஓபிசி எம்பிக்கள் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். போலியாக என் குரலில் வீடியோக்களை உருவாக்குகிறார்கள். கர்நாடக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நாட்கள் விரைவில் வரும். 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

