sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

/

பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

8


ADDED : ஜூன் 05, 2025 01:05 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:05 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த துயர சம்பவத்தில் யாரும் அரசியல் செய்ய கூடாது என நிருபர்கள் சந்திப்பில் கதறி அழுத படியே கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூருவில் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் கர்நாடக மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். யாருக்கும் இந்ந நிலைமை வரக் கூடாது. இறந்தவர்களை நினைத்து துக்கம் தாங்க முடியவல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது.

நாங்கள் நிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கவில்லை. பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்யட்டும். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us