sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்

/

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரளா தீவிரம்


UPDATED : செப் 21, 2011 11:47 AM

ADDED : செப் 21, 2011 10:29 AM

Google News

UPDATED : செப் 21, 2011 11:47 AM ADDED : செப் 21, 2011 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய அணை கட்டும் திட்டத்தில் மாற்றும் எண்ணமில்லை என அம்மாநில அமைச்சர் ஜேசாப் தெரிவித்துள்ளார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் கேரளா அணையில் நீர்மட்டத்தை உயர்த்தாமல் அணைகள் குறித்து புதிய சட்டத்தையும் கொண்டுவந்து. இந்நிலையில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பி.ஜெ. ‌ஜோசப் ,தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில், முல்லை பெரியாறில் ரூ. 666 கோடி செலவில் புதிய அணை கட்ட முடிவு செய்து, இதற்கான முழு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

புதிய அணை கட்டும் திட்டத்தின்படி பேபி அணையை உடைத்து ,42 அடி ஆழத்தில் புதிய அணை கட்டி முல்லை பெரியார் அணையில் நீரை திருப்பிவிட திட்டமிடப்பட்டுள்ளது. மு‌ல்லை பெரியார் அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நியமித்து நிபுணர் குழுவிடம் வரும் செப்.29-ம் தேதி அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அணை கட்டும் திட்டத்திற்கான கால அவகாசம் வரும் செப்.30-ம் தேதியுடன் முடிவ‌டைகிறது. இதன் காரணமாகவே, நிபுணர்கள் குழுவினரிடம் , செப்.29-ம் தேதியே கேரளா , புதிய அணை கடடும் அறிக்கையினை அளித்ததாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us