டில்லியில் போதைப்பொருள் கடத்தல் குருவி சிக்கினர்; போலீசார் தீவிர விசாரணை
டில்லியில் போதைப்பொருள் கடத்தல் குருவி சிக்கினர்; போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஜூன் 04, 2025 08:36 AM

புதுடில்லி: டில்லியில் போதைப்பொருள் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டில்லியின் மேற்கு மாவட்டத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருள் கடத்திய இருவரை போலீசார் அடையாளம் கண்டனர்.
அந்த இரண்டு நபர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் பீஹாரின் சஹ்ராசா மாவட்டத்தைச் சேர்ந்த சுஜீத் குமார் (28) மற்றும் பாதல் பண்டிட் (26) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குருவி என்பது விசாரணையில் அம்பலமானது.
போதை பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணி என்ன? கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்ட இரண்டு பேர் போலீஸ் காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.