sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதையில் அத்துமீறிய பயணி நையப்புடைத்த டி.டி.இ.,

/

போதையில் அத்துமீறிய பயணி நையப்புடைத்த டி.டி.இ.,

போதையில் அத்துமீறிய பயணி நையப்புடைத்த டி.டி.இ.,

போதையில் அத்துமீறிய பயணி நையப்புடைத்த டி.டி.இ.,


ADDED : ஜன 11, 2025 01:49 AM

Google News

ADDED : ஜன 11, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரயிலில், குடி போதையில் பெண் பயணியரிடம் அத்துமீறிய பயணியை, டி.டி.இ., எனப்படும் ரயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில் பெட்டி உதவியாளர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

பீஹாரின் கதிஹார் மாவட்டத்தில் இருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்துக்கு, அமிர்தசரஸ் - கதிஹார் எக்ஸ்பிரஸ் ரயில் சமீபத்தில் சென்றது. இந்த ரயிலில் தலைநகர் டில்லிக்கு செல்ல, லாரி டிரைவர் ஷேக் தாசுதீன் என்பவர் ஏறினார்.

'எம் 2' பெட்டியில் பயணித்த இவர், ரயில் பெட்டியின் உதவியாளர்கள் விக்ரம் சவுகான், சோனு மஹதோ ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.

போதை தலைக்கேறிய நிலையில், ரயிலிலிருந்த பெண் பயணியரிடம் ஷேக் தாசுதீன் அத்துமீறினார்.

இதை தட்டிக்கேட்ட விக்ரம் சவுகானை, கன்னத்தில் அறைந்தார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையறிந்த டி.டி.இ., ராஜேஷ் குமார், இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது, அவரையும் ஷேக் தாசுதீன் அறைந்தார். இதனால் கோபமடைந்த டி.டி.இ., ராஜேஷ் குமார் மற்றும் ரயில் பெட்டி உதவியாளர் விக்ரம் சவுகான் ஆகியோர் ஷேக் தாசுதீனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

அவர் மீது ராஜேஷ் குமார் அமர்ந்த நிலையில், 'பெல்ட்'டால் விக்ரம் சவுகான் சரமாரியாக தாக்குவது, பயணி ஒருவர் மொபைல் போனில் எடுத்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே போலீசார், உத்தர பிரதேசத்தின் பிரோசாபாதில், குடிபோதையில் இருந்த ஷேக் தாசுதீனை ரயிலிலிருந்து இறக்கி விட்டனர்.

டி.டி.இ., ராஜேஷ் குமார், ரயில் பெட்டி உதவியாளர்கள் விக்ரம் சவுகான், சோனு மஹதோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், மூன்று பேரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குடி போதையில் அத்துமீறிய ஷேக் தாசுதீன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us