sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானைகளின் அணிவகுப்புடன் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம்

/

யானைகளின் அணிவகுப்புடன் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம்

யானைகளின் அணிவகுப்புடன் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம்

யானைகளின் அணிவகுப்புடன் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம்


ADDED : அக் 01, 2025 12:22 AM

Google News

ADDED : அக் 01, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில், கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது.

அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து 'வாகச்சார்த்து' என்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை, 7:10 மணிக்கு உற்சவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு உணவளிக்கும் 'யானையூட்டு' நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் 'காழ்ச்ச சீவேலி' நிகழ்வு நடந்தது.

அதன்பின், காலை, 10:30 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற 'பஞ்சாரிமேளம்' நிகழ்வு நடந்தது. இதை ஏராளமானோர் கண்டுரசித்தனர். மாலை, 3:30 மணிக்கும் ஐந்து யானைகள் அணிவகுப்பில் 'காழ்ச்ச சீவேலி' நிகழ்வு நடந்தது. அதன்பின், நிறமாலை தரிசனம், நாதஸ்வர கச்சேரி, உற்சவர் எழுந்தருளும் வைபவம் நடந்தது.






      Dinamalar
      Follow us