ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
ADDED : மார் 20, 2024 07:37 PM

புதுடில்லி: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்கள் குறித்து மத்திய அமைச்சர் ஷோபா பேசியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா, ‛ தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை‛ என்றார்.
இவரின் சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷோபா தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்தார்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஷோபா மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடகா தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

