sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் கமிஷனின் முடிவு சரத் பவார் பாய்ச்சல்

/

தேர்தல் கமிஷனின் முடிவு சரத் பவார் பாய்ச்சல்

தேர்தல் கமிஷனின் முடிவு சரத் பவார் பாய்ச்சல்

தேர்தல் கமிஷனின் முடிவு சரத் பவார் பாய்ச்சல்


ADDED : பிப் 14, 2024 05:53 AM

Google News

ADDED : பிப் 14, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே : தேசியவாத காங்., கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித் பவார் தரப்புக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளதை, சரத் பவார் கடுமையாக கண்டித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸ், கடந்த ஜூலையில் இரண்டாக பிளவுபட்டது.

அவரது அண்ணன் மகனான அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆளும் பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் இணைந்தார்.

அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும், எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்தை தனக்கு வழங்கக் கோரி, தலைமை தேர்தல் கமிஷனில் அவர் மனு தாக்கல் செய்தார். சரத் பவார் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன், கட்சி மற்றும் அதன் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என கடந்த 6ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, சரத் பவாரின் கட்சி, தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரில் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புனேவில் ஒரு நிகழ்ச்சியில் சரத் பவார் கூறுகையில், “கட்சி மற்றும் சின்னத்தை அதன் நிறுவனர் கைககளில் இருந்து பறித்து, மற்றவர்களுக்கு வழங்கிய தேர்தல் கமிஷனின் முடிவு ஆச்சர்யம் அளிக்கிறது.

''இதுபோன்ற நிலை நாட்டில் ஒருபோதும் நடந்ததில்லை. இந்த முடிவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். சின்னத்தை விட, எண்ணங்களும், சித்தாந்தமும் தான் முக்கியம்,” என்றார்.






      Dinamalar
      Follow us