sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு: சரத் பவார் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

/

மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு: சரத் பவார் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு: சரத் பவார் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு: சரத் பவார் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

11


ADDED : டிச 10, 2024 08:01 PM

Google News

ADDED : டிச 10, 2024 08:01 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மஹாராஷ்டிரா தேர்தலில் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக, சரத் பவார் கூறிய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் 288 இடங்களில் சிவசேனா, பா.ஜ.க., மற்றும் என்.சி.பி., அடங்கிய மஹாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றியது, அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களை மட்டுமே பெற்றது.

தேர்தல் முடிவு குறித்து மஹா விகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் சந்தேகம் எழுப்பினார். ஓட்டு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், ஓட்டு இயந்திர எண்ணிக்கைக்கும், விவி பாட் சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வி.வி.பாட் எனப்படும் சீட்டு எண்ணிக்கைக்கும், மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாக்குச்சாவடிகளின் விவிபாட் சீட்டுகளை எண்ணுவது அவசியமாகிறது.

நெறிமுறைகளைப் பின்பற்றி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாக்குச்சாவடிகளின் விவிபாட் சீட்டு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று மாநில சட்டமன்றத்தின் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணும் பார்வையாளர் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 1440 விவிபாட் அலகுகளின் சீட்டு எண்ணிக்கை அந்தந்த மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. எல்லாம் சரியாகவே இருக்கின்றன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us