sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருவிழாவில் மிரண்ட யானை: கூட்டத்தில் சிக்கிய 17 பேர் காயம்

/

திருவிழாவில் மிரண்ட யானை: கூட்டத்தில் சிக்கிய 17 பேர் காயம்

திருவிழாவில் மிரண்ட யானை: கூட்டத்தில் சிக்கிய 17 பேர் காயம்

திருவிழாவில் மிரண்ட யானை: கூட்டத்தில் சிக்கிய 17 பேர் காயம்

6


UPDATED : ஜன 08, 2025 08:50 PM

ADDED : ஜன 08, 2025 05:09 PM

Google News

UPDATED : ஜன 08, 2025 08:50 PM ADDED : ஜன 08, 2025 05:09 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலப்புரம்: மலப்புரத்தில் நடந்த திருவிழாவில், யானை கூட்டத்தில் இருந்த ஒருவரை துாக்கி சுழற்றியடித்தது. கூட்டத்தில் இருந்த 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூரில் புதியங்கடியில் நேற்று இரவு நடந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு யானை மிரண்டது. கூட்டத்தில் இருந்த ஒருவரை துாக்கி சுழற்றியது. சிதறி ஓடியதில் கூட்டத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்தனர். யானை சுழற்றி அடித்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில்,

திரூரில் நடந்த புதியங்கடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். திருவிழாவில் குறைந்தபட்சம் ஐந்து யானைகள் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காட்சிகள் காட்டுகின்றன. திடீரென்று, ஐந்து யானைகளில் ஒரு யானை மிரண்டது, கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த ஒருவரை, ஸ்ரீகுட்டன் என்று பெயரிடப்பட்ட இந்த யானை, தூக்கி சுழற்றி தூக்கி எறிகிறது.

இந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

யானை துாக்கி எறிந்த நபர், கொட்டக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீதியின் காரணமாக கூட்ட நெரிசலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். யானையை கட்டுக்குள் கொண்டுவர சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.






      Dinamalar
      Follow us