அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு
அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை அசாமில் திறப்பு
ADDED : பிப் 15, 2026 12:17 AM
குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில், தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ விமானங்கள் அவசர காலங்களில் தரையிறங்கு வதற்கான ஓடுதளம் நேற்று திறக்கப்பட்டது. இதில், ராணுவ விமானம் மூலம் தரையிறங்கி பிரதமர் மோடி வரலாற்று சாதனை படைத்தார்.
எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அசாமில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
குறிப்பாக, திப்ரூகர் மாவட்டம் மோரோன் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதி, 100 கோடி ரூபாய் மதிப்பில் 4.2 கி.மீ., தொலைவுக்கு ஏற்படுத்தப்பட்டது.
இதை திறந்து வைப்பதற்காக அசாம் சென்ற பிரதமர் மோடி, சவுபா விமானப்படை தளத்தில் இருந்து, 'சி - 130ஜே' என்ற ராணுவ விமானத்தில் பயணித்தார்.
இந்த விமானம், தேசிய நெடுஞ்சாலை 37ல்
தொடர்ச்சி 5ம் பக்கம்

