sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பயங்கரவாத கும்பலை தேடி காஷ்மீர் முழுதும் சல்லடை

/

பயங்கரவாத கும்பலை தேடி காஷ்மீர் முழுதும் சல்லடை

பயங்கரவாத கும்பலை தேடி காஷ்மீர் முழுதும் சல்லடை

பயங்கரவாத கும்பலை தேடி காஷ்மீர் முழுதும் சல்லடை

4


UPDATED : மே 03, 2025 07:35 AM

ADDED : மே 03, 2025 06:21 AM

Google News

UPDATED : மே 03, 2025 07:35 AM ADDED : மே 03, 2025 06:21 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தலைமறைவாக உள்ளனர்; பயங்கரவாதிகளை தேடுவதில், அடர்ந்த காடுகள், பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளன.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பைசரன் புல்வெளியில், 26 சுற்றுலாப் பயணியரை, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ராணுவம், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,), ஜம்மு - காஷ்மீர் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அடர்ந்த காடுகளிலும், பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சல்லடையாக தேடி வருகின்றனர். மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் குகைகள் போன்ற இயற்கை வசிப்பிடங்கள், பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளன. உள்ளூர் உளவாளிகள், பொதுமக்களில் சிலர், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த் டேட், சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

ஜம்மு - காஷ்மீர் போலீசார் கூறியதாவது:


குப்வாரா, ஹந்த்வாரா, அனந்த்நாக், டிரால், புல்வாமா, சோபூர், பாரமுல்லா, பந்திபோரா போன்ற பகுதிகள் கண்காணிப்பு பகுதிகளாக உள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் அனுதாபிகள், ஆதரவாளர்கள் இடையே உள்ள தொடர்புகளைக் கண்டறிய, போன் அழைப்பு பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதுவரை 100 நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்; சந்தேகத்துக்குரிய, 15 பேர்தீவிர விசாரணையில் உள்ளனர்.

ஹுரியத் மற்றும் ஜமாத்--இ-- இஸ்லாமி போன்ற பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த தேடுதல்களின்போது பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுஉள்ளன. பல அமைப்புகள் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாத தொடர்புகள் இன்னும் துண்டிக்கப்படாமலே உள்ளன. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

ஆப்லைனில் செயல்படும் சீன தயாரிப்பு கருவிகள்


அதிகாரிகள் கூறுகையில், 'பாகிஸ்தான் ராணுவத்தில், இவர்கள் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளனர். சராசரி ஊடுருவல் கும்பல் பயங்கரவாதிகளாக இவர்களை கருதிவிட முடியாது. அவர்கள் வனத்தில் நடக்கும் போரில், சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். காடுகளில் பல வாரங்கள் மறைந்திருந்து உயிர்வாழும் திறன் கொண்டவர்கள். சீனாவில் தயாரிக்கப்பட்ட அல்ட்ராசெட் போன்கள் போன்ற ஆப்லைனில் செயல்படும், தகவல் தொடர்பு சாதனங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். ஆப்லைன் மேப்பிங் கருவிகளைப் பயன்படுத்தி, இடத்தை கண்டறிந்து தொடர்ந்து நகர்கின்றனர்' என்றனர்.








      Dinamalar
      Follow us