sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்சிக்கு வருவேன் ஈஸ்வரப்பா கருத்து

/

கட்சிக்கு வருவேன் ஈஸ்வரப்பா கருத்து

கட்சிக்கு வருவேன் ஈஸ்வரப்பா கருத்து

கட்சிக்கு வருவேன் ஈஸ்வரப்பா கருத்து


ADDED : ஜன 20, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யாத்கிர்: ''சரியான நேரத்துக்காக காத்திருக்கிறேன். அந்த நேரம் வந்ததும், பா.ஜ.,வுக்கு திரும்புவேன்,'' என முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஹிந்துத்வா தலைவர்கள் பற்றாக்குறையால், நான் பா.ஜ.,வை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பா.ஜ.,வை சுத்திகரிக்க வேண்டும். கட்சியின் சூழ்நிலை, இப்போதும் அப்படியே தான் உள்ளது. சுத்தமாகவில்லை. இன்று இல்லை என்றாலும், கட்சியில் அனைத்தும் சரியாகும் என, நம்புகிறேன்.

பா.ஜ.,வுக்கு திரும்பும்படி, பல தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சரியான நேரத்துக்காக காத்திருக்கிறேன். அந்த நேரம் வந்த பின் பா.ஜ.,வுக்கு செல்வேன்.

பா.ஜ., எனக்கு தாயை போன்றது. ஷிவமொக்கா நகர பா.ஜ., செயலர் முதல், துணை முதல்வர் வரை, பல பதவிகளை வழங்கியது. ஆனால் கட்சியில் நடந்த சில, விரும்பத்தகாத நிகழ்வுகளால் கட்சியை விட்டு வெளியேற வேண்டி வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us