ADDED : அக் 24, 2025 05:25 PM

புதுடில்லி: '' பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்து வருகின்றன,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டில்லியில், ஐக்கிய நாடுகளின் 80 வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான ஐ.நா., ஆற்றும் எதிர்வினையை விட, ஐநா எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி மிச்சிறந்த உதாரணங்கள் உள்ளன.
காஷ்மீரின் பஹல்காம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் அமைபைபை, பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் வெளிப்படையாக பாதுகாக்கும் போது, ஐநாவின் பன்முகத்தன்மையின் நம்பகத்தன்மைக்கு என்ன செய்யும். குற்றம் செய்தவர்களை பொறுப்பேற்கச் செய்வதில், சர்வதேச அமைப்புகள் தோல்வியடைந்து வருகின்றன.
உலகளாவிய திட்டம் என்ற பெயரில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதனை தூண்டிவிட்டவர்களையும் சமமாக மதிப்பிட்டால் உலகம் எவ்வளவு சுயநயலமானதாக இருக்கும். பயங்கரவாதிகள் என தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டவர்களை தடையில் இருந்து பாதுகாக்கும் போது, அதற்கு காரணமானவர்களின் நேர்மையை பற்றி என்ன சொல்கிறது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது வெறும் வாய் வார்த்தையாக மாறிவிட்டால், வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தின் இக்கட்டான நிலை இன்னும் பிரச்னையாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

