ஜல் போர்டு பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
ஜல் போர்டு பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 07, 2026 02:09 AM

புதுடில்லி: மேற்கு டில்லி ஜனக்புரியில், டில்லி ஜல் போர்டு கட்டுமானப் பணிக்காகத் தோண்டியிருந்த, 15 அடி பள்ளத்தில் பைக் விழுந்து வாலிபர் உயிரிழந்தார். அதேநேரத்தில், அவரது குடும்பத்தினர் நேற்று முன் தினம் இரவில் இருந்து தேடிக் கொண்டிருந்த நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்புகள் டில்லி கைலாஷ்புரியை சேர்ந்தவர் கமல் பயானி, 25. ரோஹிணியில் உள்ள தனியார் வங்கி கால் சென்டர் ஊழியர். நேற்று முன் தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இரவு முழுதும் தேடினர்.
ந ண்பர்கள் உறவினர்களிடம் விசாரித்தனர். ரோஹிணி, சாகர்பூர், ஜனக்புரி மற்றும் விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன்களிலும் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், ஜனக் புரியில் டில்லி ஜல் போர்டு தோண்டி வைத்திருந்த குழிக்குள் பைக்குடன் கமல் விழுந்து கிடப்பது நேற்று காலை 8:00 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். பள்ளத்தில் கி டந்த பைக் மற்றும் கமல் உடல் மீட்கப்பட்டது.
மேற்குடில்லி மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் தரடே சரத் பாஸ்கர் கூறியதாவது:
போ லீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு காலை 8:00 மணிக்கு போன் செய்த ஒரு பெண், ஜனக்புரியில் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் ஒரு வாலிபர் மற்றும் ஒரு பைக் கிடப்பதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றோம். தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜனக்புரியில் டில்லி ஜல் போர்டு தோண்டியிருந்த பள்ளத்தில் இருந்து வாலிபர் உடல் மற்றும் பைக் மீட்கப்பட்டது.
விசாரணையில் அது, கைலாஷ்புரியை சேர்ந்த கமல் பயானி என்பது தெரிய வந்தது. உடற்கூறு ஆய்வுக்காக கமல் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
அந்தப் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததாக டில்லி ஜல் போர்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தச் சாலை சில நாட்களாக மூடப்பட்டுள்ளது. மேலும், கமல் விழுந்த பள்ளமும் நேற்று முன் தினம் தான் தோண்டப்பட்டுள்ளது.
கமல் தினமும் இந்த வழியில் சென்றிருக்கலாம். ஆனால், நேற்று முன் தினம் இரவு வரும் போது இந்தப் பள்ளத்தை கவனிக்காமல் வண்டியுடன் விழுந்திருக்கலாம். விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அழைப்பு கமலின் இரட்டைச் சகோதரரான கரண் பயானி கூறுகையில், “என் சகோதரன் மொபைல் போனில் நேற்று காலை மீண்டும் நான் அழைத்தபோது போலீசார் பேசினர். உடலைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறினர்.
நாங்கள் சென்றபோது, கமலின் உடலும் அவன் பைக்கும் பள்ளத்தில் கிடந்தது. கமல் எப்படி அந்தப் பள்ளத்துக்குள் விழுந்தான் என தெரியவில்லை. நாங்கள் மூன்று சகோதரர்கள். நானும் கமலும் இரட்டையர். நேற்று முன் தினம் இரவு முதல் அவனைத் தேடிக் கொண்டிருந்தோம்,” என்று கூறி கதறினார்.
கமலின் நெருங்கிய நண்பர் மயங்க் கூறுகையில், “அதிகாரிகளின் அலட்சியத்தால் வாழ வேண்டிய ஒரு வாலிபரை இழந்து விட்டோம்.
இந்தச் சம்பவத்தால் கமலின் குடும்பம் நிலைகுலைந்து விட்டது. கமலுக்கு சிகிச்சை அளித்துவ் வருவதாக அவன் தாயிடம் பொய் சொல்லி இருக்கிறோம். விபத்தாக இருந்தாலும், சரியான நேரத்தில் கண்டுபிடித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
நேற்று முன் தினம் இரவு, 11:30 மணிக்கு கமலிடம் மொபைல் போனில் பேசினேன். பதினைந்து நிமிடத்தில் வீட்டுக்கு சென்று விடுவதாக கூறினான். ஜனக்புரி போலீசில் புகார் செய்து, கமலின் மொபைல் போன் இருப்பிடத்தை கண்டு பிடித்து தர கோரினோம்.
அவர்கள் கொடுத்த இருப்பிடம் தவறாக இருந்தது. புகார் பதிவு செய்யுமாறு கேட்டோம். காலையில்தான் அதைச் செய்ய முடியும் என்றும், இரவில் தேட முடியாது என கூறி விட்டனர்,” என்றார்.
டில்லி அருகே கிரேட்டர் நொய்டா 150வது செக்டாரில் கடந்த மாதம் 17ம் தேதி காருடன் பள்ளத்தில் விழுந்த சாப்ட்வேர் இன்ஜினியர் யுவராஜ் மேத்தா,27, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

