sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லையில் இந்தியா - வங்கதேச விவசாயிகள் மோதல்

/

எல்லையில் இந்தியா - வங்கதேச விவசாயிகள் மோதல்

எல்லையில் இந்தியா - வங்கதேச விவசாயிகள் மோதல்

எல்லையில் இந்தியா - வங்கதேச விவசாயிகள் மோதல்

5


ADDED : ஜன 18, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 18, 2025 10:15 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: எல்லையில், இந்தியா - வங்கதேச விவசாயிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்தியா வங்கதேச எல்லையில், மேற்கு வங்க மாநிலத்தின் சுக்தேவ் எல்லை சோதனைச்சாவடி பகுதியில் வேலி அமைக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என கடந்த 6ம் தேதி வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதால் பணி நிறுத்தப்பட்டது. பிறகு இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டது. மறுநாள் முதல் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த பகுதியில் சர்வதேச எல்லையில், இரு நாட்டு விவசாயிகளும் பணி புரிந்து கொண்டு இருந்தனர். அப்போது வங்கதேச விவசாயிகள் திருட்டில் ஈடுபடுவதாக இந்திய விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

இது தொடர்பாக பி.எஸ்.எப்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதைத் தொடர்ந்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு நாட்டு விவசாயிகளும், அவர்களது பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற மோதலில் ஈடுபடக்கூடாது என இந்திய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் கூற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us