sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செராடு வனதுர்க்கை கோவிலில் உற்சவம்

/

செராடு வனதுர்க்கை கோவிலில் உற்சவம்

செராடு வனதுர்க்கை கோவிலில் உற்சவம்

செராடு வனதுர்க்கை கோவிலில் உற்சவம்


ADDED : பிப் 19, 2025 09:51 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு ; பாலக்காடு, மலம்புழா அருகே உள்ள, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம், இன்று முதல் 23ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே உள்ளது செராடு வனதுர்க்கை அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம், இன்று முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று மாலை, 6:30 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இரவு 8:00 மணிக்கு கேரளா பாரம்பரிய நடனமான ஓட்டன் துள்ளல் ஆகியவை நடக்கிறது. 21ம் தேதி காலை சிறப்பு பூஜைகளுக்கு பின், காலை, 7:30 மணிக்கு உற்சவத்தையொட்டி கொடியேற்றம் நடக்கிறது. அதன்பின், அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுதல், கலச பூஜை, பொங்கல் பூஜை, காழ்ச்சீவேவி ஆகியவை நடக்கிறது. 22ம் தேதி காலை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

உற்சவ நாளான, 23ம் தேதி காலை 9:00 மணிக்கு செண்டை மேளம் முழங்க யானை அணிவகுப்புடன் காழ்ச்சீவேலி நடக்கும். மதியம், 12:00 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 5:00 மணிக்கு செண்டைமேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை மீது அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடக்கிறது. இரவு நடக்கும் காழ்ச்சீவேவியோடு உற்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us