sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்

/

பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்

பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்

பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்


ADDED : அக் 13, 2025 02:49 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் வரலாற்றில் முதன்முறையாக, விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்லை பாதுகாப்பு படை யில், 1969ம் ஆண்டு முதல் விமானப்பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில், பி.எஸ்.எப்.,பின் விமானப்பிரிவில் முதல் பெண் விமான இன்ஜினியராக பாவ்னா சவுத்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பி.எஸ்.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எம்.ஐ., 17 ரக ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு ஆட்கள் தேவைப்பட்ட நிலையில், ஏற்கனவே மூன்று துணை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு, 'எம்.ஐ., 17, சீட்டா, துருவ்' போன்ற ஹெலிகாப்டர்களுடன் வி.ஐ.பி.,க்களுக்கு பயன்படுத்தும் ஜெட் விமானங்களை இயக்குவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், இதற்காக அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us